பிரான்சில்‌‌‌ உணர்வோடு இடம்பெற்ற மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு!📸

 ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து இந்த இலட்சியத்திற்காகப் போராடி அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்.”

இவர்களை நெஞ்சங்களில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
நேறறு : 25.05.2024 சனிக்கிழமை பி. பகல் 15.00 முதல் 18.00 மணிவரை
: 36, Av. de la Division 93000 Bobigny
பகுதியில் உணர்வோடு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருவாட்டி நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வின் முக்கிய செயற்பாட்டாளர் திரு. செவ்வேள் அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஈகைச்சுடரினை 08.11.2012 அன்று பிரான்சில் சாவடைந்த கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார்.

மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்றி

வைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.