ஸ்ரீ ரவிசங்கர் குருஜி இலங்கை வருகை!
வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகரும், அமைதித் தூதுவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி நேற்று சனிக்கிழமை (18) இலங்கை வந்தடைந்தார்.
அவரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி நாளை ஞாயிற்றுக்கிழமை (19) காலை 9.00 மணிக்கு நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
அதனை தொடர்ந்து, நாளை மாலை 5.15 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறும் சத்சங்கத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
கருத்துகள் இல்லை