யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில், நேற்று (20) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான வீரசிங்கம் தயானந்தன் என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அளவெட்டி வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக
தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை