அசாதாரண காலநிலை!


அசாதாரண காலநிலை காரணமாக 6மாவட்டங்களில் 3518 குடும்பங்கள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்றும் பல பல பிரதேசங்களில் நூறு மில்லி மீற்றரை அண்மித்ததாக மழைவீழ்ச்சி காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் ஏழு மாவட்டங்களுக்கு காணப்படுவதாகவும் நீர் நிலைகளின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருவதனால் அதனை அண்டி வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


தென்மேற்குப் பருவ மழை தீவி முழுவதுமான முறையில் நிலை கொள்வதனால் தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.