சாரதியை கடத்திச்சென்று தாக்குதல்!!
பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், மூவருடன் சேர்ந்து லங்கம பேருந்து சாரதியை கடத்திச் சென்று தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரகம ரைகமவில் இருந்து தெஹிவளை ஹெட்டியாவத்தை வரை தினமும் பயணிக்கும் லங்கம பேருந்தின் சாரதி ஒருவரே தாக்குதலுகுள்ளாகியுள்ளார்.. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உடஹமுல்ல டிப்போவின் சாரதியான 45 வயதான ரசிக பெரேரா என்பவரே தாக்குதலில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி, நடவடிக்கை எடுத்த பொலிஸார், பண்டாரகம, விதாகம பிரதேசத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.
இது தொடர்பில் இரண்டு சகோதரர்கள் உட்பட நால்வர் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அன்றைய தினம் அவர்களை அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்துமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை