அப்பா பறித்ததை சேர்த்து தருவீர்களா?

 


தற்போதைய பதின்மூன்று  வேண்டாம் .. அப்பா பறித்ததை சேர்த்து தருவீர்களா?விக்கியின் கேள்விக்கு சஜித் மெளனம்.


தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் 13 ஆம் திருத்தத்தை நிறைவேற்றியே தீருவேன் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனிடம் தெரிவித்த நிலையில் தற்போது அரசியலமைப்பின் பிரகாரம் உள்ள 13 ஆம் திருத்தம் வேண்டாம் உங்கள் அப்பா ரணசிங்க பிரேமதாசா பறித்த பதின்மூன்றின் அதிகாரங்களையும் சேர்த்து தருவெர்களா என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார் 


நேற்று புதன்கிழமை யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் இல்லத்தில் எதிர் கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச வுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் சஜித் பிறேமதாச என்னைச் சந்திக்க ஐந்து மணிக்கு வருவதாக கூறி எழுமணிக்கே வந்தார் சில சந்திப்புக்கள் திடீரென ஏற்பாடு இடம்பெற்றதாக அறிந்தேன்.


நான் அவரிடம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடையங்கள் தொடர்பில் பல்வேறு விடையங்களை க் கூறினேன் அவர் மெளனமாக கேட்டார் பதில் வழங்கவில்லை.


13 ஆவது திருத்தம் தொடர்பில் பேசியபோது பதின்மூன்றை நடைமுறைப்படுத்துவேன் என  தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கிவிட்டேன் அதை உங்களிடம் கூறுவதற்காகவே வந்தேன் என்றார்.


நான் அவரிடம்  கூறினேன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக 13வது திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட பதின்மூன்றை தக்கவைத்தாவது தமது இருப்புக் களை பாதுகாக்கலாம் என்ற நோக்கத்திற்காக வேண்டும் என்றேன்.


நீங்கள் கூறும் தற்போதைய பதின்மூன்று எமது மக்களுக்கு வேண்டாம் உங்கள் தந்தை ரணசிங்க பிரேமதாசா காலத்தில் பதின்மூன்றாவது திருத்தத்தில் இருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.


அதாவது மாகாண நிர்வாகத்தின் கீழ் இருந்த அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர் போன்றவற்றை மீண்டும் மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்றேன்.


எல்லாவற்றையும் மெளனமாக கேட்டார் செய்வேன் செய்யமாட்டேன் என பதில் கூறவில்லை தன்னை நம்புங்கள் என கூறிவிட்டுச் சென்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.