வீடு புகுந்து இளம் பெண் மீது துப்பாக்கிச்சூடு!!
மட்டக்களப்பு காத்தான்குடியில் வீடு புகுந்து இளம் பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (14) முற்பகல் புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் வீதியில் வீடு ஒன்றிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தீக் சிபானியா (வயது32) என்பவரே இச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதுடன் இப் பெண்ணின் கணவர் அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும் அவர் ஒரு மௌலவி எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி பொலிஸார் சி.சி.ரி.வி கமராக்களையும் சோதனை செய்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது துப்பாக்கி ரவைகளையும் மீட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை