போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது!!

 


போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறு ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த யாழ்.  இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும் அவரது புகைப்படத்திற்கும் வித்தியாசம் காணப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் பதிவிட்ட நிலையில் கடவுச்சீட்டைப் பற்றிய கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

இந்த கடவுச்சீட்டின் உண்மையான உரிமையாளருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம் விமானப் பயணத் தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அனுராதபுரம் நகரத்தில் உள்ள தரகர் ஒருவரால், ஒரு கோடியே 30 இலட்சம் தருவதாக உறுதியளித்து அதன் அடிப்படையில் இந்த இளைஞருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.