திருகோணமலை மாணவனின் சாதனை!!

 


திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவன் பஹ்மி ஹசன் சலாமா இம்மாதம் ஜூன் 15ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த உள்ளார் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய இவர் கடந்த மூன்று மாதங்களாக இந்தச் சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.


இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையான 32 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி நேரத்தில் தாம் கடக்க எண்ணியுள்ளார் என சலாமா கூறினார்.


கடந்த 18ஆம் திகதி இவர் பாக்கு நீரினையின்  இலங்கை கடல் எல்லையில் இருந்து தலைமன்னார் வரையிலான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்தி கடந்துள்ளார்.


இவருக்கான நீச்சல் பயிற்சிகளை விமானப்படை கோப்பிறல் றொசான் அபேசுந்தர வழங்கி வருகின்றார். இந்தப் பயிற்றுநர் 2021 ஆம் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்று மீளவும் அங்கிருந்து தலைமன்னாருக்கு 28 மணித்தியாலயம் 19 நிமிடம் 58 செக்கனில் நீச்சாலை நிறைவு செய்து ஆழிக்குமரன் ஆனந்தன் ஏற்படுத்தியிருந்த 51 மணி நேர சாதனையை முறியடித்த சாதனையாளர் ஆவார்.



கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையைச் சேர்ந்த ஹரிகரன் தனவந்தையும் இவரே பயிற்றுவித்திருந்தார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.