முல்லைத்தீவு ஏ9 வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

 


முல்லைத்தீவு ஏ9 வீதியில் திருமுறிகண்டிக்கும் கொக்காவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹை-ஏஸ் ரக வாகனமானது முன்னே சென்றுகொண்டிருந்த பாரஊர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 



இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். 


இந்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.