பேருந்துகளால் அவதியடையும் மக்கள்!
கிளிநொச்சியில் அரச, தனியார் பேருந்துளின் போட்டியால் பயணிகள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்றையதினம் (18-07-2024) பிற்பகல் 2.45 மணியளவில் இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்றுவதற்கு முண்டியடித்த பேருந்துகள் வவுனியா நோக்கி பயணித்த நிலையில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை