சிறுவர்கள் மாயம்!!
கடந்த நான்கு நாட்களுக்கு மேல் காணாமல் போன நிலைமையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
தலவாக்கலை - க்றேட்வெஸ்டன் - லூஷா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களான , 15 வயதான சிறுவன் ஒருவரும், 16 வயதான 3 சிறுமிகளும் மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி, வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இதுவரையில் வீடு திரும்பவில்லை.
அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) காலை வீட்டிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களின் பெற்றோர் தலவாக்கலை பொலிஸாருகு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் போயுள்ளதாக சந்தேகிக்கப்படும் 4 பேரில் ஒரு சிறுமி அவரது பெற்றோருக்கு அன்றைய தினம் பிற்பகல் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தித் தாம் நாவலப்பிட்டி பகுதிக்குச் செல்வதாகக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் குறித்த தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்ற இலக்கத்தை அடிப்படையாக வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் சிறுவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை