சுகாதாரப் பிரிவுகள் 13 அபாய வலயங்களாக அடையாளம்!

 


நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 27,755 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், டெங்கு நோயினால் இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.