தமிழ் மக்களது பொது வேட்பாளர் என்பது பொய். முற்றாக நிராகரிக்கின்றோம்.!

 


அரியநேத்திரன்  ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட தரப்பினருடைய வேட்பாளரே தவிர தமிழ் மக்களது பொது வேட்பாளர் என்பது பொய். முற்றாக நிராகரிக்கின்றோம். இவ்வூறு குறிப்பிட்டார் செ.கஜேந்திரன்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,


2009 மே 21 இல் இந்திய அதிகாரிகள் கொழும்பில் வைத்து சம்பந்தனுக்கு இட்ட கட்டளையை ஏற்று தமிழ்த் தேசியக் கோரிக்கைகளைக் கைவிட்டு 13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொண்ட சம்பந்தனுக்குப் பின்னால் சென்று சம்பந்தன் இவ்வுலகைவிட்டு விடைபெறும் வரை அவருக்குப் பக்கபலமாக செயற்பட்டவரே இந்த அரியநேத்திரன். 


வடககு கிழக்கு இணைப்பை கைவிட்டு

பௌத்தம் அரச மதம் என்பதனை ஏற்றுக் கொண்டு

சமஸ்டியை கைவிட்டு

ஏக்கிய இராச்சியவை ஏற்றுக் கொண்டு 2016-2019 காலப்பகுதியில் புதிய அரசியல் யாப்பினை தயாரிப்பதில் ரணில் மைத்திரியுடன்  சுமந்திரன் சம்பந்தனுடன்  முழுமையான கருத்தொருமிப்பபுடன் செயற்பட்டவரே இந்த அரியநேத்திரன். 

மேலும் சர்வதேச விசாரணையை தடுத்து உள்ளக விசாரணை என்ற போர்வையில் இனப்படுகொலையாளிகளான மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதிகள் பலரையும் பாதுகாப்பதில் சுமந்திரனுடன் முற்றுமுழுதாக ஒத்துழைத்துச் செயற்பட்டவர்களில் அரியநேத்திரனும் முக்கியமானவர். 

அரியநேத்திரன் சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பினர் ரணில் மைத்திரி அரசுடன் தேன்நிலவு கொண்டாடிக்கொண்டிருந்தபோதே மயிலத்தமடு மாதவனை பகுதியில் மேச்சல் தரைகள் அழிக்கப்பட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் அழிவுக்குள் தள்ளப்பட்டுசிங்களக் குடியேற்றவாசிகள் அங்கு கொண்டுவந்து குடியேற்றப்ட்டார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.