பிரபல உணகத்திற்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

 


மட்டக்களப்பு நகரில் இயங்கிவரும் பிரபல உணவகம் ஒன்றை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடுமாறு இன்று 18) உத்தரவு பிறப்பித்ததையடுத்து உடன் பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.

சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உணவகத்தின் கழிவு நீர் வெளியேறி வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கி நிற்பதுடன் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு தெரிவித்து வந்தனர்.  

குறித்த உணவகத்தை புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் தலைமையிலான பரிசோதகர்கள் முற்றுகையிட்டு பரிசோதனையிட்டுள்ளனர்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.