ஒரு கடிதம்!!


 தம்பி செலஸ்ரின் லோயர்!


வணக்கம். நாங்கள் சுகம். நீங்களும் சுகமா இருப்பியள் எண்டு நம்புறம்.


சாவகச்சேரி பிரச்சினைக்கு தம்பி அர்ச்சுனா நீதிமன்றம் போனபோது;


யாழ்ப்பாணத்தில் நீங்கள் முன்வந்து அந்த வழக்கை எடுத்து நடத்தினியள். அதுகும் அஞ்சு சதம் எனக்கு வேண்டாம் எண்டு சொல்லி அர்ச்சுனாவுக்காக வாதாட வந்தபோது நாங்கள் எல்லாரும் உங்களின் சேவையை பாராட்டினம்.


அதுக்குப்பிறகு ரண்டுபேரும் அண்ணன்-தம்பி எண்டு பாசத்தில நெஞ்சை நக்கிறமாதிரியெல்லாம் பேஸ்புக்கில பதிவுகள் போட்டியள்.


திடீரெண்டு நீங்கள் தம்பி அர்ச்சுனாவை விமர்சிச்சும் நக்கலடிச்சும் பதிவுகள் போட்டியள்.


ஒரு சட்டத்தரணியாக அல்லாமல் நீங்கள் சமூகவலைத்தளம் ஒன்றில் உங்களுடைய கட்சிக்காரரை கேவலமாகவும் நக்கலாகவும் வெளிப்படையாக விமர்சித்தீர்கள்.


"Condem of court"

"Conflict of interest" 


எண்ட வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் நீங்கள் ஒரு "வீடியோ" விட்டியள்.


அதைவிட மிகக்கேவலமாக "மோதிப்பாப்பம்" எண்டமாதிரியான உங்கட உடல் மொழியும் நக்கலும் நழினமும் உங்களின் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பையும் கெடுத்தது.


"டக்ளசை விமர்சிச்சால் நான் உன்னை(அர்ச்சுனா) விமர்சிப்பன்" எண்ட உங்களின் கேவலமான வாதத்தை பார்த்தபோது;


அர்ச்சுனா உங்களை தன்னுடைய வழக்கில் இருந்து விலத்தியது 100% சரியென தோன்றுகிறது.


ஒரு வைத்தியனிடம் வரும் நோயாளியை நோயாளியாக மட்டுமே பார்க்கவேண்டும். அவன் தன்ர கோவக்காறனா? அல்லது எதிரியா? என்று பார்ப்பது தவறு.


அதுபோலத்தான் ஒரு சட்டத்தரணியை நம்பி வரும் ஒருவர் மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை காட்டக்கூடாது. அதுதான் தொழில் தர்மம். அதுகூட உங்களுக்கு தெரியவில்லையே சகோதரம்!


என்ன கோதாரியை  வருசக்கணக்காக உங்களுக்கு சட்டக்கல்லூரியில் படிப்பிச்சாங்களோ தெரியவில்லை!


மேலும்;


அர்ச்சுனாவின் சட்டத்தரணியாக இருக்கும் வரை அவரை பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது. அதுதான் முறை.


"இன்றில் இருந்து நான் அர்ச்சுனாவின் சட்டத்தரணி அல்ல" என்ற சட்டபூர்வமான கடிதத்தை அர்ச்சுனாவுக்கு அனுப்பிவிட்டு அல்லது பொதுவெளியில் சொல்லிவிட்டு அவரைப்பற்றிய விமர்சனங்களை நீங்கள் தாராளமாக வைத்திருக்கலாம். 


அது பிழையில்லை. நாங்களும் விமர்சிச்சிருக்கமாட்டம்!


ஆனால் நீங்கள் என்ன செய்தியள்?


"அர்ச்சுனாவின் சட்டத்தரணியாகவும் இருப்பன். பொதுவெளியில் அவரை நக்கலடிச்சும் எழுதுவன்" எண்டது உங்களின் கீழ்த்தரமான தொழில் முறை!


அதுக்கும் ஒரு "விண்ணாண விளக்கம்" குடுத்தியள்.


அதாவது unprofessionalism!


"அரசியலுக்கு வந்தா அடிப்பம். அடி பலமாக விழும்" எண்டியள். 


அரச்சுனா அரசியலுக்கு வரவேயில்லையே. வாறன் எண்டு சொன்னதுக்கு இந்தளவு பயமா? 


"அரசியல் வேற. வழக்கு வேற. அரசியலில் அர்ச்சுனாவை விமர்சிப்பன். ஆனால் அவருக்கு ஆதரவாக வழக்காடுவன்" எண்ட உங்களின் விளக்கங்களை பார்க்கும் போது உங்களின் அனுபவம் அந்தளாந்தான் என்று எண்ணத்தோன்றியது.


அர்ச்சுனாமீதான அரசியல் ரீதியான விமர்சனங்களை நீங்கள் அவரோடு நேரே பேசியிருக்கலாம். அல்லது off the record இல் வைச்சிருந்திருக்கலாம்.(வழக்கு முடியும் வரை)


அதுதான் professionalism!


உங்களுக்கு டக்ளஸ் தேவானந்தா "மகான்" ஆக இருக்கலாம். அதை நீங்கள் பொதுவெளியில் சொல்வதற்கும் உரிமை உண்டு.


அதுக்காக அர்ச்சுனாவுக்கும் சனத்துக்கும் அவர் "மகான்" ஆக இருக்கவேண்டும் எண்டு எதிர்பார்க்கமுடியாது சகோதரம்!


30 ஆண்டுகால "வரலாறு" மிகத்தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அதைவிடுவம்!


விசயத்துக்கு வாறம்!


அர்ச்சுனாவின் வழக்கில் இருந்து நீங்கள் வெளியேறியது அல்லது அர்ச்சுனாவால் வெளியேற்றப்பட்டது மிகச்சரியான முடிவு.


ஏனெண்டால் நாளைக்கு வழக்கில் ஏதாவது விரும்பத்தகாத முடிவுகள் வந்தால் அது உங்களுக்கும் நல்லதல்ல!


அர்ச்சுனாவுக்கும் நல்லதல்ல!


பாக்குற எங்களுக்கும் நல்லதல்ல!


கடைசியாக;


நீங்கள் ஒரு விசயத்தை வலு தெளிவா எழுதி "Banner" ஒண்டு அடிச்சு உங்கட வீட்டு மதில்ல கட்டிவிடுங்கோ!


"என்னுடைய மகானாகிய டக்ளஸ் தேவானந்தா ஐயாவைவும் என்னுடைய ஈ.பி.டி.பி கட்சியையும் விமர்சிப்பவர்களுக்கு நான் வாதாடமாட்டேன்"


அப்பதான் சனத்துக்கு தெளிவு பிறக்கும்.


நன்றி

#திரு_பொதுசனம்


நன்றி : தமிழ்ப் பொடியன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.