காலம்!!

 


DR.அர்ச்சுனா  தமிழர்களுக்காக குரல் கொடுக்க போய் சிறையில் வாடுகிறார். 


அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கக்கூடாது என முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் டெனிஸ்வரன் நீதிமன்றத்தில் வாதாடி அர்ச்சுனாவை பிணையில் வெளியே வர விடாமல் தடுத்துள்ளார். 


சரி பிழைகளுக்கு அப்பால் பிணை மறுக்கும் அளவுக்கு அர்ச்சுனா செய்த குற்றம் என்ன? 22 சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக வாதாடியுள்ளனர்.  


22 சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக வாதாடும் அளவுக்கும் பிணை மறுக்கும் அளவுக்கும் அர்ச்சுனா செய்த குற்றம் என்ன? 


பொதுவாக பாரதூரமான கிரிமினல் குற்றங்களுக்கு தான் பிணை மறுக்கப்படுவது வழமை. அர்ச்சுனா யாரையாவது கொலை செய்தாரா? அல்லது பாலியல் குற்றம் புரிந்தாரா? ஊழல் மோசடியில் ஈடுபட்டாரா?  


தனது வேலை வெட்டி எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு அப்பாவி ஏழை இளம் தாயின் மரணத்திற்கு நியாயம் கேட்க போனதற்கு   தமிழ் தேசியம் வழங்கிய மகத்தான வெகுமதி சிறைத்தண்டனை. 


இனிமேல்  அரச மருத்துவமனைகளில் உங்களது உறவினர்கள் யாராவது மருத்துவர்களின் அல்லது தாதியர்களின் அசண்டையீனம் காரணமாக கொல்லப்பட்டாலோ அல்லது அங்கவீனமடைந்தாலோ நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு மருத்துவர்களுக்கு பாதநமஸ்காரம் செய்து விட்டு வெளியேறுங்கள். 


தப்பித்தவறி யாரவது வாயைத்திறந்தால் அவர்களை பிணையில் வெளியே வர முடியாத அளவுக்கு உள்ளே தள்ளுவதற்கு திருட்டுக்கூட்டம்  காத்துக்கொண்டிருக்கிறது. 


இக்கொலையை  பெரும்பண்மை இனத்தை சேர்ந்தவர்கள் செய்திருந்தால் முழு நாயும் கத்தியிருக்கும்


நன்றி: Parameswaran Navaratnam

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.