அருண் தம்பி முத்து அல்ல- சூரிய பிரதீபா!

 


தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பி முத்து அல்ல.. மத்திய குழு உறுப்பினர் சூரிய பிரதீபா தெரிவிப்பு.


தமிழர் விடுதலைக் கூட்டணியின் தெரிவு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இடம் பெற்று வரும் நிலையில் தன்னை தலைவராக அருண் தம்பி முத்து கூறுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரும் மகளிர் பேரவைச் செயலாளருமான சூரியமூர்த்தி சூரிய பிரதீபா தெரிவித்தார்.


இன்று வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அவர் மேலும் தெரிவிக்கையில் சில ஊடகங்களில் அவதானித்தன் அடிப்படையில் அருண் தம்பி முத்து தன்னை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எனக் கூறி கருத்துக்களை முன்வைத்து வருகிறார். 


அவர் அவ்வாறு கருத்துக்களை முன் வைப்பது ஏற்க முடியாது சிலர் தம்மை தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் என கூறிக்கொண்டு கூட்டத்தை நடத்தி இருந்தார்கள்.


இந்தக் கூட்டம் செல்லுபடி அற்றது என அறிவிக்குமாறு நீதிமன்றத்தில் மத்திய குழு உறுப்பினர்கள் வழக்கு தாக்கல் செய்த நிலையில் வழக்கு இடம் பெற்று வருகிறது. 


நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இடம் பெற்று வரும் நிலையில் அருண் தம்பி முத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக தன்னை கூறிக்கொள்ள முடியாது. 


கருத்து தெரிவிப்பது ஜனநாயக உரிமை அருண் தம்பி முத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என கூறாமல் தனது கருத்துக்களை தெரிவிக்கலாம். 


ஆகவே ஊடகங்கள் மற்றும் தூதுவராலயங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என அருண் தம்பி முத்து கருத்து வெளியிடுவதியோ கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்வதையோ ஏற்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.