சஜித் நாட்டு மக்களுடன் தான் "டீல்"

 


சஜித் நாட்டு மக்களுடன் தான் "டீல்"

அரசியல் வாதிகளுடன் அல்ல.. உமாச்சந்திரப்பிரகாஸ் தெரிவிப்பு


ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுடன் தான் டீல் பேசுகிறாரே தவிர அரசியல் வாதிகளுடன் பேசவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் உமாச்சந்திரப் பிரகாஷ் தெரிவித்தார்.


இன்று வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுடன் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பெண்ணாக சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாகப் பயணித்துவருகிறேன்.


நாட்டில் வாழும் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை ஒன்றினைந்து நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கு கொண்டு செல்லும் ஒரே தலைவர் வேறு யாரும் அல்ல சஜித் பிரேமதாசாதான்.


தற்போது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சி தாவும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.


ஜனாதிபதி வேட்பாளர் ரணில் பக்கம் செல்பவர்களுக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் மற்றும் எரிபொருள் நிலையங்களுக்கான அனுமதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.


ஆனால் அவற்றை ஆதாரங்களுடன் முன்வைக்க முடியாது எமது நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவுபூர்வமான வர்கள் தமது பெயரில் அனுமதிகளைப் பெற மாட்டார்கள்.


எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று பல்வேறு உதவிகளை தனது சொந்த பணத்திலே வழங்கி வருகிறார். 


 பாடசாலைகளுக்கு பேருந்துகள் மற்றும் பாடசாலைகளில் இலத்திரனியல் வகுப்பறைகளை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து பல கோடி ரூபாய்களை செலவழித்து வருகிறார். 


சஜித் பிரேமதாசர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மக்களுடன் டீல் பேசி வருகிறார் எரிபொருள் நிலையங்களுக்கோ அல்லது மதுபான நிலையங்களுக்கோ டீல் பேசுபவர் சஜித் அல்ல. 


ஆகவே நாட்டு மக்கள் தமது எதிர்காலத்தை சிந்தித்து நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கக்கூடிய ஊழல் அற்ற தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.