திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை!


 திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என்று கேட்டதற்குப் பதிலளிக்காத அநுர திஸாநாயக்க, தன்னை விவாதத்திற்கு அழைப்பதாகவும் தன்னுடன் விவாதத்திற்கு வர முன்னர் அநுர, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தனியாக விவாதம் நடத்தி நாட்டுக்குத் தமது சரியான பொருளாதாரக் கொள்கையைச் கூற வேண்டும் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நேற்று பிற்பகல் நடைபெற்ற குருநாகல் மாவட்ட அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனான கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாம் முன்னர் குறிப்பிட்டதுபோல் அநுரவும், தானும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பங்கேற்கும் காணொளி உரையாடலுக்கு நேரத்தை ஒதுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில், யாருக்கும் பேச இடமளிக்காமல் பேசக்கூடிய சஜித்தையும் இதற்கு அழைக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.


ஜனாதிபதி வேட்பாளர் ரணில் கருத்து:


‘ஐ.எம்.எவ்வுடனான நிபந்தனைகளை மீறிவிட்டால் அவர்களின் ஆதரவு இரத்தாகும் – பொருளாதாரம் சரிவை நோக்கி நகரும்’

குருநாகல் அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் தெரிவிப்பு

‘பல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தேன்’

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.