12 ராசியினருக்கும் அதிர்ஷ்டம் தரும் ராசி கணபதி வழிபாடு!
கோள்களால் ஏற்படும் பாதிப்புகளை விலக்கி, அதிர்ஷ்ட யோகங்களைப் பெற்றிடும் வகையில், 12 ராசி கணபதிக்குச் செய்ய வேண்டிய பிரத்யேக வழிபாடுகள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
ராசி கணபதி: விநாயகர் என்றால் தலைவன் என்று பொருள். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத முதன்மை நிலையில் இருப்பவர் ஆதலால், பிள்ளையாரை ‘விநாயகர்’ என்று போற்றுகிறோம். இவரின் அவதாரம் குறித்துச் சிறப்பித்துச் சொல்கின்றன புராணங்கள்.
தன் நாயகரான சிவபிரானைத் தியானித்து, தனது திருமேனியில் இருந்த நறுமணப் பொருட்களைத் திரட்டி, மகாகணபதியை உமாதேவி படைத்தருளியதையும் சிவனருளால் பிள்ளையார் கணநாதரான திருக்கதையையும் நாமறிவோம். சிவமகாபுராணம் சொல்லும் திருக்கதை இது.
பண்டாசுரனுடனான போரின்போது, `ஜயவிக்ன யந்திரம்' எனும் மந்திரத் தகட்டால் சக்தி சேனைக்குப் பின்னடைவை உண்டாக் கினர் அசுரர்கள். இந்தத் தருணத்தில் அம்பிகை - காமேஸ்வரரின் அருள்பார்வை சங்கமத்தால் ‘மகா கணேசன்’ தோன்றினார். அவர் மந்திரத் தகட்டை அழித்தார் என்கிறது பிருமாண்ட புராணம்.
ஒருமுறை, ஈசனும் அம்பாளும் திருக் கயிலாயத்தில் இருக்கும் சித்திர மண்டபத்துக்கு எழுந்தருளினார்கள். அங்கேயுள்ள மந்திர மூலங்களின் மீது தங்களின் திருப்பார்வையை செலுத்தினார்கள். அப்போது ஓர் ஒளி வட்டமும் அதிலிருந்து தண்டமும் தோன்றின; தண்டம் ஒலியாக தழைத்தது. இந்த ஒளி-ஒலி இரண்டிலும் இருந்து உதித்த திருவடிவே, வரத கணபதி. ஒளி வட்டம்- பிந்து; தண்டம் (ஒலி) - நாதம். பிந்து மற்றும் நாதத்தில் இருந்து அகர, உகர, மகரம் பிறக்கும். இந்த மூன்றும் சேர்ந்து ‘ஓம்’ என்று ஒலிக்கும். ஆக, ‘ஓம்’காரம் எனும் பிரணவத்தின் உருவமே பிள்ளையார் என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.
இங்ஙனம், புராணங்களும் ஞானநூல்களும் சிறப்பிக்கும் விநாயகரின் அவதாரம் நிகழ்ந்த திருநாளே விநாயகசதுர்த்தி.
நமது வாழ்வு மட்டுமல்ல, நம் சந்ததி சிறக்கவும்... சதுர்த்தி தினங்களில் பிள்ளையாரை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவது ரொம்பவே விசேஷம். ஆவணி மாதம், ஹஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய நன்னாளில் வருவது விநாயகர் சதுர்த்தி.
இந்த நாளில், அதிகாலையில் நீராடி, நித்ய கர்மங்களை நிறைவேற்ற வேண்டும். பிறகு பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து வழிபடுவது விசேஷம்!
அழகான குடை அமைத்து, அதன் கீழ் விநாயகரை அமர்த்தி, அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்தி, சந்தன-குங்கும திலகமிட்டு அலங்கரிக்கலாம். நைவேத்தியமாக பழங்கள், அச்சு வெல்லம், அவல், பொரிகடலையுடன், சுண்டல் மற்றும் கொழுக்கட்டையை தாம்பூலத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர்...
வக்ர துண்ட மஹாகாய
சூர்ய கோடி சமப்ரபா நிர்விக்னம் குருமே
தேவ சர்வ கார்யேஷு சர்வதா...
- எனப்போன்ற விநாயகர் ஸ்லோகங்கள், துதிகள் பாடி, தூப- தீப உபசாரங்கள் செய்து வழிபட வேண்டும். வழிபாடு முடிந்தபின் குறிப்பிட்டதொரு நன்னாளில், விநாயகர் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் சேர்க்கவேண்டும்.
இதன் மூலம் பிள்ளையாரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம். மட்டுமன்றி, கணபதி பெருமானை வழிபடுவதால், நவ கிரகங்களும் நற்பலன்களைப் பரிபூரணமாக அளிக்கும் என்கின்றன புராணங்கள்.
அவ்வகையில், நடப்புக் கோசாரப்படி கோள்களால் ஏற்படும் பாதிப்புகளை விலக்கி, அதிர்ஷ்ட யோகங்களைப் பெற்றிடும் வகை யில், 12 ராசி கணபதிக்குச் செய்ய வேண்டிய பிரத்யேக வழிபாடுகள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
பன்னிரு ராசிகளும் பிள்ளையார் வழிபாடும்
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு, ராசிக்கு 12-ல் ராகு; 6-ல் கேது இருக்கிறார்கள். இதனால் செலவுகளும் வீண் விரயங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. குருபகவான் 2-ல் இருக்கிறார். சிற்சில தடைகள் ஏற்படலாம். இந்த நிலை மாறிட, மேஷ ராசிக்கார்கள், அம்மன் கோயிலில் அருளும் விநாயகருக்குப் பாலபிஷே கம் செய்யவேண்டும். கொண்டைக்கடலைச் சுண்டல் நிவேதித்துத் தானம் வழங்கலாம். இதனால், எதிர்பாராத வெற்றிகளும் பொருள் வரவுகளும் உண்டாகும்.
ரிஷபம்: இவர்களுக்கு ஜன்ம குரு நடைபெறு கிறது. கோசாரப்படி சுக்ரன்5-ம் இடத்தில் நீச்சமுடன் கேதுவோடு இணைந்திருக்கிறார். பிள்ளைகளால் மனக்கிலேசம், அவர்களுக்காக குடும்பத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படலாம். வீண் மனக்குழப்பமும் ஏற்படும். இந்த ராசியினர், அரசமரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு வஸ்திரம் சாத்தி, 12 தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடலாம். இதனால் பாதிப்புகள் நீங்கும்; காரிய வெற்றி உண்டாகும்.
மிதுனம்: ராசியில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். 4-ல் கேதுவும் சுக்ரனும்; 10-ராகுவும் உள்ளார்கள். சிறுசிறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு வேலைகள் பாதிக்கப் படலாம். மனதின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் உடல் சுணங்கும்.
இவர்கள் முருகன் ஆலயங்களில் அருளும் பிள்ளையார் வழிபாட்டுக்கு அபிஷேகத் திரவியங்கள் வாங்கிக் கொடுக்கலாம். அரிசி-வெல்லம் தானம் தருவதன் மூலம் அதிர்ஷ்ட யோகங்கள் கைகூடும்.
கடகம்: இவர்களுக்கு அஷ்டமத்துச் சனி நடைபெறுகிறது. மட்டுமன்றி குருபகவான், 12-ல் செவ்வாய், ராகு-கேதுவின் சஞ்சாரங் கள் வாழ்வில் சலனத்தை ஏற்படுத்தலாம். அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று 16 தீபங்கள் ஏற்றிவைத்து சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது விசேஷம். 11 பேருக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இதன் மூலம் மனத்தைரியமும், நம்பிக்கையும் பிறக்கும். புது முயற்சிகள் வெற்றிபெறும்.
சிம்மம்: கண்டச்சனி நடைபெறும் காலம் இது. 10-ல் குரு. கேதுவும் ராகுவும் முறையே 2 மற்றும் 8-ல் இருக்கிறார்கள். செயல்பாடுகளில் சிறிது சுணக்கம் ஏற்படலாம். இவர்கள் ஸித்தி விநாயகர் அல்லது முச்சந்தியில் அருளும் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. பசுவுக் குக் காய்கறி உண்ணக் கொடுங்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
கன்னி: ராசியில் சுக்ரன் உள்ளார். செவ்வா யின் நிலையால் பணி இடத்தில் சிரமங்கள் ஏற்படலாம். தனிப்பட்ட விஷயங்களில் சுணக்கம் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு, இனம்புரியாத பயம் வந்துபோகும். இந்த ராசியினர், அம்மன் ஆலயத்தில் அருளும் பிள்ளையாருக்கு 11 தேங்காய்களை மாலையா கக் கட்டி அணிவித்து வழிபடுவதால் நன்மை உண்டாகும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.
துலாம்: 8-ல் குரு இருக்கிறார். 5-ம் இடத்தில் சனி அமர்ந்துள்ளார். மனக்குழப்பங்கள் நீங்கி நினைத்தவை நல்லபடியே நிறைவேற, தனிக்கோயிலில் மூல மூர்த்தியாய் அருளும் பிள்ளையாருக்கு அரிசி, வெல்லம் அளிக்க வேண்டும். பசுக்களுக்கு உணவு வழங்கலாம். விநாயகர் சதுர்த்தி அன்று 6 பேருக்கு அன்னதானம் வழங்கலாம்.
விருச்சிகம்: 8-ம் இடத்தில் செவ்வாய் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே சச்சரவுகள் குழப்பங்கள் ஏற்படலாம். சில விஷயங்களில் ஏமாற்றம் ஏற்படும். சூரியனின் நிலை யால் பணியிடத்தில் சிறு பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. இவர்கள், பெருமாள் கொயிலில் அருளும் தும்பிக்கை ஆழ்வாருக்கு அருகம்புல் மாலை, வஸ்திரம் சாத்தி வழிபட வேண்டும். அத்துடன், கருட பகவானுக்குத் தீபம் ஏற்றி வணங்குவதால் நிம்மதி பிறக்கும். செய்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு: இந்த ராசியினருக்கு 6-ல் குருபகவான் இருக்கிறார். அன்றாடப் பணிகளில் சில தடங்கல்களும், எதிர்பார்த்த விஷயங்களில் தாமதமும் ஏற்படலாம். இவர்கள் பிள்ளையார் கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடலாம். குழந்தை களுக்கு மோதகம் விநியோகிக்க லாம். இதன் மூலம், மனநிம்மதி பிறக்கும்; எடுத்த காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
மகரம்: பாதச்சனி நடைபெறும் காலம் இது. பெருமாள் கோயிலுக் குச் சென்று தும்பிக்கையாழ்வாரை தரிசித்து வணங்குவதுடன், 11 தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவது சிறப்பு. ஆலயங்களுக்கு தீபமேற்ற நெய் வாங்கிக் கொடுக்கலாம். இதன் மூலம் சனிக்கிரக பாதிப்புகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் சந்தோஷச் செய்திகள் சீக்கிரம் வந்துசேரும்.
கும்பம்: ஜன்மச்சனி நடைபெறு கிறது. 7-ல் சூரியன். தம்பதிக்கு இடையே பிணக்குகள், ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட லாம். இவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று 8 வியாகர் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது விசேஷம்.
ஒவ்வொரு கோயிலிலும் 8 தீபங்கள் ஏற்றி வழிபடவேண்டும். அபிஷேகத்துக்கு இளநீர், பன்னீர், பால் வாங்கிக்கொடுக்கலாம்.
மீனம்: ஜன்மத்தில் ராகு. விரயத்தில் சனி. மூன்றில் குரு. இந்த ராசியினர் வீண் செலவு களைத் தவிர்க்கவும், குடும்பம், ஆரோக்கியம், தனவரவு ஆகிய விஷயங்களில் மேன்மை காணவும், சிவாலயங்களுக்குச் சென்று விநாயகரை வழிபடலாம்.
விநாயக சதுர்த்தி அன்று கோயில்களில் நடைபெறும் கணபதி ஹோமத்தில் கலந்து கொள்வது சிறப்பாகும். அந்த ஹோமங்களுக்குச் சமித்துகள் வாங்கி அளிப்பதால், அதிர்ஷ்ட யோகங்கள் கைகூடும்; வியாபார முன்னேற்றம் பதவி உயர்வு போன்ற நன்மைகள் கிட்டும்.
கருத்துகள் இல்லை