காலி முகத்திடலில் குவிந்து கிடக்கும் வாகனங்கள்!
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற்று புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அடுத்தக்கட்ட நகர்வுகளை முழு நாடும் மற்றும் சர்வதேசமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் ஊழலுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்த அநுர குமார திஸாநாயக்க தான் ஆட்சிக்கு வந்தால் கடந்த அரசாங்கத்தில் ஊழல் செய்த அனைவரையும் கைது செய்வேன் என பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.அநுரவின் முன்னால் இருந்த சவால்
பிரசாரங்களோடு மாத்திரம் நின்று விடாமல் ஊழல்வாதிகள் குறித்த ஆவணங்களை சேகரித்து அது தொடர்பான கோப்புக்களை ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுரவுக்கு, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எத்தனை பெரிய சவாலோ அதேபோன்று ஊழல்வாதிகள் குறித்து அவர் பகிரங்கப்படுத்திய ஆவணங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவர் முன் இருந்த பெரிய சவாலாக காணப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை