இன்று ஆவணி சதுர்த்தி!!
யாழ்ப்பாணம் - நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் ஆவணி சதுர்த்திப் பெருவிழா இன்று சனிக்கிழமை காலை 1008 சங்காபிஷேகம், பஞ்சமுகப் பிள்ளையார் அர்ச்சனை மற்றும் தீபாபரதனைகள் நடைபெறவுள்ளன.
ஆவணிமாத சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்தார். விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் ஜென்ம தினமாக நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் வழிபாடு என்பது இந்துக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரத்தின் வழிபாடாக உள்ளது
அந்தவகையில் நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தில் மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூசை நடைபெறும். மாலை நிகழ்வுகள் 5 மணியளவில் மூலஸ்தான பூஜையுடன் ஆரம்பமாகி மாலை 6.30 மணியளவில் வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி உலா வருவார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை