ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் த.தே.ம.மு க்கும் இடையிலான சந்திப்பு!📸

 


ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் திருகோணமலை மாவட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு 31/08/2024 திருகோணமலையில் நடைபெற்றது 


இந்த சந்திப்பிப்ன்போது திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கணேசபிள்ளை குகன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணபிள்ளை ஸ்ரீபிரசாத் கட்சியின் செயற்பாட்டாளர் க. சிந்துஜன் ஆகியோர் கலந்து கொண்டனர் 


 ♦️ஒற்றையாட்சி முறைமை நீக்கப்பட வேண்டும் 


 ♦️வடகிழக்கு தமிழர் தாயகம் தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் 


♦️ சுவிட்ச்லாந்து, கியூபெக், போன்ற நாடுகளில் காணப்படுகின்ற சமஷ்டி அரசியலமைப்பு முறை ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் 


 ♦️இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் 


 ஆகிய விடயங்களை வலியுறுத்தியதோடு தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை ஏற்று ஒற்றையாட்சிமுறைமை நீக்கப்படும் என்கின்ற உத்தரவாதத்தை பிரதான வேட்பாளர்கள் எவரும் தராத நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்னும் விடயத்தையும் தெரிவித்திருக்கின்றோம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.