புளியோதரை செய்வது எப்படி ?


தேவையான பொருள்கள்:


1. உதிரியாக வேக வைத்த அரிசி சாதம்

2. புளி

3. மஞ்சள் தூள்

4. உப்பு

5. நல்லெண்ணெய்

6. கடுகு

7. உளுந்தம் பருப்பு

8. கறிவேப்பில்லை

9. கடலைப்பருப்பு

10. பெருங்காயத் தூள்

11. தோல் உரித்த வறுத்த வேர்க்கடலை

12. காய்ந்த மிளகாய்

13. காய்ந்த மிளகாய் (மீடியம் சைஸ்)

14. மல்லி விதை

15. கடலை பருப்பு

16. உளுந்தம் பருப்பு

17. எள்ளு (தேவைப்பட்டால்)

செய்முறை:

1. அடுப்பில் வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மல்லி விதை, மற்றும் எள்ளு சேர்த்து லேசாக வறுத்து எடுத்து வைத்து ஆற வைத்துக் கொள்ளவும். பிறகு நன்கு ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

2. மறுபுறம், புளியை 200 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டுத் தாளிக்கவும்.

3. கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், கடலைப்பருப்பு, வேர்க்கடலை கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டுத் தாளிக்கவும். அத்துடன் பெருங்காயத்தையும் சேர்க்கவும்.

4. பின்னர் புளித் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இதனை புளிக் காய்ச்சல் என்பார்கள். இந்தப் புளிக் காய்ச்சல் கெட்டியானதும் உப்பு மற்றும் வறுத்து பொடித்த தூளை சேர்த்து கிளறி ஆற வைத்துள்ள சாதத்தில் தேவையான அளவு இந்தப் புளிக்காய்ச்சலை சேர்த்து கிளறவும். அப்போது மேலும் சிறிது உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும். இப்போது சுவையான புளி சாதம் ரெடி.

திண்டுக்கல்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.