சூப்பரான மதிய உணவு காளான் மிளகு சாதம் செய்வது எப்படி ?


தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் - 1 கப்

காளான் - 250 கிராம்

வெங்காயம் - 1

மிளகு - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மல்லி தூள் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


செய்முறை :

காளானை நன்றாக நீரில் கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
அடுத்து உப்பு, காளானை சேர்த்து வதக்கி, பின் பொடி செய்து வைத்துள்ள மிளகை சேர்த்து, குறைவான தீயில் காளானை வேக வைக்க வேண்டும்.

காளானானது நன்கு வெந்ததும், அதில் சாதத்தைப் போட்டு, மசாலா சாதத்தில் நன்கு ஒன்று சேரும் வரை 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான காளான் மிளகு சாதம் ரெடி....

மீரா கார்த்திக்கின்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.