மட்டக்களப்பு குளுவினமடு தேவிலாமுனையைச் சேர்ந்த மாணவி உயிரிழப்பு!


 நிமோனியா காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு குளுவினமடு தேவிலாமுனையைச் சேர்ந்த மாணவி உயிரிழப்பு


 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட 

குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி. அ.வர்ஷாயினி ( 13 வயது) மாணவி நிமோனியாக்காச்சலால் பீடிக்கப்பட்டு  உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி மட் /மமே /கொல்லநுல்லை விவேகானந்த  வித்தியாலயத்தில் 8 ம் தரத்தில் தனது கல்வியை தொடர்ந்துகொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கல்வி நடவடிக்கைகள் மாத்திரமன்றி விளையாட்டிலும் ஈடுபாடுடையவராக காணப்பட்ட இம் மாணவி இவ் வருடம் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய அளவிலான கராத்தே போட்டியொன்றில் பதக்கம் வென்ற மட்/மமே/ கொல்லநுல்லை விவேகானந்த வித்தியாலய கராத்தே அணியிலும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது 


இம் மாணவியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.