கொழும்பில் தனித்துப் போட்டி டக்ளஸ்!


சளைத்தவர்கள் அல்ல நாம், சவால்களை தனித்துவ மாகவே சந்தித்தவர்கள் நாங் கள். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட் டத்திலும் களம்காணத் தயா ராகி வருகிறோம் என ஈ.பி.டி. பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற் தொழில்,நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரி வித்துள்ளார்.


யாழ்ப்பாணம் வலிவடக்கு மாவிட்டபுரம் மாவை கலட்டி கிராம மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்த தாவது,


ஜே.வி.பியானது ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு தேசிய நீரோட்டத்தில்இணைந்து ஜனநாயக வழிமுறைக்கு வந்து ஆட்சியை கைப்பற்றியிருக் கிறார்கள்.


நாட்டின் புதிய ஆட்சி யாளர்களுக்கும் ஈ.பி.டி.பி கட் சிக்கும் இடையில் கொள்கை களில் பாரிய வேறுபாடுகள் இல்லை.


இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள் அதுபோல ஈ.பி. டி.பியும் இடதுசாரி பாரம்பரி யத்திலிருந்து வந்திருக்கிறது.


இந்தப் பாராளுமன்றத் தேர் தலிலும் வென்று இம்முறை யும் பாராளுமன்றம் செல்வோம் என தெரிவித்ததுடன், இம் முறை நாங்கள் வடமாகாணத் திலுள்ள 5 மாவட்டங்களிலும் கிழக்கிலுள்ள 3 மாவட்டங் களிலும், அத்துடன் கொழும் பிலும் போட்டியிடவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.