யாழில் வர்த்தகர் ஒருவர் தற்கொலை முயற்சி!!


 யாழில் பிரபல வர்த்தகர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள அவருக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இரவு நேரம் மரம் ஒன்றில் ஏறி துாக்கில் தொங்க முற்பட்ட நிலையில் அயல்பகுதியில் உள்ளவர்களால் அவதானிக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

களஞ்சியம் உள்ள காணியின் மரத்தில் யாரோ ஏறுவதை அவதானித்த அயலில் உள்ள இளைஞா்கள் திருடன் என நினைத்து அவதானித்த போது அந் நபர் கழுத்தில் கயிற்றைக் கட்டி துாக்கில் தொங்க ஆயத்தமானதை பார்த்து உள்ளே சென்று அவரை மீட்ட போதே அவர் களஞ்சியத்துக்கு சொந்தமான பிரபல வர்த்தகர் என தெரியவந்தது.

அண்மையில் களஞ்சியசாலைக்கு 12 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து வர்த்தகருடன் கடும் சண்மையிட்டுள்ளார்.

தனது மகளை துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக தாய் கத்திக் குளறி ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் தெரியவருகி்ன்றது.

அச் சிறுமியும் தாயும் வர்த்தகர் குறித்த களஞ்சியசாலையில் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி வந்து செல்பவர்கள் எனவும் அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது.

அப் பெண்ணுடன் அந்தரங்க நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர் பெண்ணின் சிறுவயது மகளையும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி இருக்கலாம் எனவும் இதன் காரணமாக குறித்த பெண் வர்த்தகரை அச்சுறுத்தி பெருமளவு பணத்தை தொடர்ச்சியாக பறித்துவந்திருக்கலாம் எனவும் அயலவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள்.

இதன் தொடர்ச்சியகவே வர்த்தகர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கருதப்படுகின்றது தகவல் கிடைத்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.