பொலிஸ் உத்தியோகத்தரின் கொடூர செயல்
சேவையில் புதிதாக இணைந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆடைகளைக் கழற்றிவிட்டு சித்திரவதை செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
திஸ்ஸமஹாராமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
குறித்த மூவரும் கடந்த 24 ஆம் திகதி அன்று இரவு தங்களது பொலிஸ் விடுதியில் தங்கியிருந்தனர்.
அப் போது அங்குச் சென்ற சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரினதும் ஆடைகளைக் கழற்றிவிட்டு அவர்களை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை