புதிய கடவுச்சீட்டுக்கள் இன்று முதல் இலங்கையில்!

 


மூன்று வகையான புதிய கடவுச்சீட்டுக்கள் இன்று முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


1. சாதாரண கடவுச்சீட்டுக்கள் - கருநீல நிறம் 


2. உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் - பழுப்பு சிவப்பு நிறம் (Maroon)


3. இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள், - சிவப்பு நிறம் 


கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன.


4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை

6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில்

8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம்

9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்

10-11 ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம்

12-13 ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை

14-15 ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம்

16-17 ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி

18-19 ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம்

20-21 ம் பக்கத்தில் காலி கோட்டை

22-23 ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம்

24-25 ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம்

26-27 ம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள்

28 ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம்

29 ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை

30 ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள்

31 ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை

32-33 ம் பக்கத்தில் சிகிரியா குன்று

34 ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு

35 ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா

36 ம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிலாய் பறவைகள் சரணாலயம்

37 ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம்

38-39 ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம்

40-41 ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல்

42-43 ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை

44 ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு

45 ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை

என்பன அச்சிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.