அம்பாறை - மதரசா அதிபர், ஆசிரியருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!


 அம்பாறையில் உள்ள காரைத்தீவில் மாவடிபள்ளி பாலத்திற்கு அருகில் உழவு வண்டி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான 4 பேரில் இருவர் விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான கைதான மதரஸா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் நேற்றையதினம் சம்மாந்துறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, மதரஸா பாடசாலையின் அதிபரையும், ஆசிரியரையும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏனைய இருவரையும் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.