இளம் பாடகர்கள் மூவர் அதிரடி கைது!

 


யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஈழத்து பாடகர்கள் மூவரை வவுனியா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.


வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகையான பணத்தை அவர்களது வங்கிக் கணக்குகளுக்குப் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இன்றையதினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


குறித்த நபர்கள் மூவரும் இசை குழு ஒன்றை உருவாக்கி, பாடல்களை வெளியிட்டு வந்தனர்,

சமீபத்தில் இந்தியா, லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு பல இசை நிகழ்ச்சிகளுக்காக சென்றுவந்திருந்தனர்.


இந்த நிலையிலேயே இவர்களின் வங்கிக்கணக்குக்கு பெருந்தொகையான பணம் பரிமாறப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,


இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டு மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவத்தில் தாவடி, கோப்பாய், கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.