விபத்தில் கடற்படை வீரர் பலி!!

 


திருகோணமலையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (16-11-2024) ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


கடற்படை வாகனமும், கெப் ரக வாகனமும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவத்தில் சம்பூர் கடற்படை முகாமில் கடமை புரியும் 49 வயதுடைய கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார்.


மேலும், மற்றைய வாகனத்தில் பயணித்த மற்றும் ஒருவர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.