2025முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான சேர்க்கை ஜனவரி 30 ஆம் திகதி வியாழன் அன்று ஆரம்பிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை