போலி ஆவணங்களோடு காணி விற்பனை!

 


போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காணி ஒன்றை 60 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்த முன்னாள் உப பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சந்தேக நபர் இரத்தினபுரி - பெல்மடுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடையவர் ஆவார்.


சந்தேக நபர் கொழும்பு 02 - கொம்பனி வீதியில் உள்ள காணியொன்று தொடர்பில் போலி ஆவணங்களைத் தயாரித்து, அதனை 60 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.