கோட்டை – காங்கேசன்துறை தினசரி ரயில் சேவை 31 ஆம் திகதி முதல்!


தைமாதம் 31ஆம் திகதி முதல் கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தினசரி இரவு தபால் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:35 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சென்றடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதேபோல, காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையுமென திணைக்களம் குறிப்பிடுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.