30 000 வேலைவாய்ப்புகள்!!
இலங்கை அரச சேவையில் 30,000 அத்தியாவசிய காலியிடங்கள் நிரப்பப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (26) அனுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, பொது சேவையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள சுமார் 30,000 அத்தியாவசிய காலியிடங்களை அவசரமாக நிரப்ப வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பான நிதி ஒதுக்கீட்டிற்கான முன்மொழிவுகளை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நேர்காணல்கள் தாமதமாகக்கூடிய காலியிடங்கள் குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டதுடன் , ஒருங்கிணைந்த பொது சேவை மூலம் மனித வளங்களை நிர்வகிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை