சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!!

 


யாழ்ப்பாணவாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


யாழ் . நகர் பகுதியில் கன்ரர் ரக வாகனத்தில் வாடகை சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவரின் நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,


வாகன வாடகை தரிப்பிடத்திற்கு வந்த இருவர் , கிளிநொச்சி பகுதியில் இருந்து பொருட்களை ஏற்றி வர வேண்டும் என கூறி வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர்.


இதன்போது பரந்தன் பகுதியில், வீதியோரமாக வாகனத்தை நிறுத்த கோரி , அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி, சாரதிக்கு குடிப்பதற்கு வழங்கியுள்ளனர்.


அதனை குடித்தவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். வீதியோரமாக நீண்ட நேரமாக வாகனத்தில் சாரதி அசைவின்றி காணப்பட்டுள்ளார்.

இதனை வீதியால் சென்றவர்கள் அவதானித்து , சாரதியின் அருகில் சென்று பார்த்த போது , சாரதி மயக்கத்தில் இருப்பதனை அறிந்து உடனடியாக அவரை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே சாரதி சுயநினைவுக்கு வந்துள்ளார்.


அதன் பின்னரே தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து , சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக தெரியவருகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.