காதலனுக்கு கணவனால் நேர்ந்த கதி!!
மாதம்பே பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணுடைய கணவனின் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவியின் காதலன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பலத்த காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றியதினம் (28) அன்று ஒருவர் உயிரிழந்ததாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாதம்பே பழைய நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய துஷார தில்ருக்ஷ என அடையாளம் காணப்பட்டுள்ளார். கணவனின் தாக்குதலில் காயமடைந்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சந்தேக நபரின் மனைவியுடன் சிறிது காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், சம்பவ தினத்தன்று இருவரும் மாதம்பே பழைய நகரப் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் தங்கியிருந்த போது கணவன் கையும் மெய்யுமாக பிடித்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த இடத்திற்கு வந்த கணவர் தனது மனைவியை மற்றும் அவரது கள்ளக்காதலனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காதலன் உயிரிழந்த நிலைட்யில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை