கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி விடுதலை


கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இருப்பினும், அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற நபரை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி உட்பட இரண்டு பேர் சமீபத்தில் மஹரகம பகுதியில் கைது செய்யப்பட்டனர்.


இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.