திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் விபத்து!
மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) பயணித்த வாகனம் இன்று (1/2/2025) திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை, உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன்னாலுள்ள பாதைசாரிக் கடவையில் பொதுமக்கள் கடக்கையில் வாகனத்தை நிறுத்திய போது பின்னால் அதீவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுபாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்ட வேனில் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக உப்புவெளி பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை