தை பௌர்ணமி தானத்தின் சிற
தை மாதத்தின் சிறப்பு மிக்க நாட்களில் ஒன்று பெளர்ணமி. அனைத்து மாதங்களில் வரும் பெளர்ணமி திதி சிறப்பு மிக்கது என்றாலும், தை மாத பெளர்ணமி நினைத்ததை நிறைவேற்றி வைத்து, அளவில்லாத புண்ணியங்களை தரக் கூடிய நாளாகும். பெரும்பாலும் தை மாத பெளர்ணமியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும்.இந்த நாளில் புனித நதிகளில் புனித நீராடுவதால் ஆத்மா சுத்தமடையும். அதோடு பெருமாள் வழிபாடும், முன்னோர்கள் வழிபாடும் நமக்கு அவர்களின் ஆசியையும், பாவங்களில் இருந்து மன்னிப்பும் கிடைக்க செய்யும். குறிப்பாக திரிவேணி சங்கமத்தில் நீராடுவது மிகவும் சிறப்பு.
இந்த ஆண்டு தை பெளர்ணமி பெப்ரவரி 12ஆம் திகதியான இன்று புதன்கிழமை வருகிறது. இந்த நாளில் குறிப்பிட்ட 5 பொருட்களை தானமாக அழிப்பதால் அளவில்லாத அதிர்ஷ்டம், வெற்றி, செல்வ வளம் ஆகியவற்றை கிடைக்க செய்யும்.
தை பெளர்ணமியில் தானம் அளிக்க வேண்டியவை
எள்
தை மாத பெளர்ணமி அன்று எள் தானமாக அளிப்பது மிக மிக உயர்வானதாகும். இது செல்வ வளம், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றை தரும். எள், ஆன்மிக தன்மை கொண்டதாகும். இதை தானம் செய்வதால் ஆத்மாவில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீங்கும். பாசிடிவ் ஆற்றல்கள் ஈர்க்கப்படும். அதிக அளவில் நன்மைகள் நடைபெறும். கோவில்கள் அல்லது ஏழைகளுக்கு எள் வாங்கி தானமாக கொடுக்கலாம்.
வெல்லம்
வெல்லத்தை தானமாக கொடுப்பதால் வாழ்க்கையில் மகிழ்ச்சி, இனிமை, நன்மைகள் அதிகரிக்க துவங்கும். வெல்லம் என்பது மகிழ்ச்சி மற்றும் செல்வ வளத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இதை தானமாக கொடுப்பது புண்ணிய செயலாக கருதப்படுகிறது. கோவில்களுக்கு பிரசாதம் தயாரிப்பதற்கு அல்லது ஏழைகளுக்கு வெல்லத்தை தானமாக கொடுக்கலாம். இதனால் நீங்கள் மகிழ்ச்சி, நன்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இதனால் உங்களை சற்றி மகிழ்ச்சிகளும், நன்மைகளும் அதிகரிக்க துவங்கும்.
போர்வை
தை பெளர்ணமியில் போர்வைகளை, ஏழைகளுக்கும் சாலையோரம் வசிப்பவர்களுக்கும் தானமாக கொடுக்கலாம். இது நல்ல கர்மாக்கள், ஆசிகளை உங்களுக்கு வழங்கும். போர்வை என்பது பாதுகாப்பு, அக்கறையின் அடையாளமாகும். இதை தானமாக குடுப்பது சுயநலமில்லாத தன்மையாக கருதப்படுகிறது. இது உங்களுக்கு புண்ணியங்களையும், அளவில்லாத நன்மைகளையும் பெற்றுத் தரும்.
மண் பாண்டங்கள்
பெளர்ணமி நாளில் மண் பாண்டங்களை தானமாக கொடுப்பதால் அதிர்ஷ்டம், செல்வம் அதிகரிக்கும். மண் பானைகள் என்பது எளிமை மற்றும் மனித நேரத்தின் அடையாளமாகும். இதை கோவில்களுக்கும், ஏழைகள் நீரை சேகரித்து வைப்பதற்கும் வாங்கிக் கொடுப்பது நல்லது. இத உங்கள் வாழ்க்கையில் செல்வ வளத்தை பெருக செய்யும்.
அன்னதானம்
அமாவாசை மட்டுமின்றி பெளர்ணமியிலும் யாருக்கானது அன்னதானம் அளிப்பது உயர்ந்த புண்ணிய பலனை தரும். இது ஆசீர்வாதத்தையும், நிறைவான வாழ்க்கையையும் உங்களுக்கு அளிக்கும். உணவு என்பது நிறைவை தரக் கூடியது. இதனால் ஆதரவற்றவர்கள், ஏழைகள், கோவில்கள் ஆகியவற்றில் அன்னதானம் செய்யலாம். இது உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை பெற்றுத் தரும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை