யாழ் மத்திய கல்லூரியின் மரதன் ஓட்டப் போட்டி!!

 


யாழ். மத்திய கல்லூரி மெய்வல்லுனர் போட்டியின் ஆரம்ப நிகழ்வான மரதன் ஓட்டப் போட்டி நேற்று நடைபெற்றது.

பள்ளி முதல்வர் எஸ். இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ். தர்மினி பத்மநாதன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

யாழ். நகரப்பகுதியைச் சுற்றி சுமார் 5 km தூரம் கொண்டுதான் இந்தப் போட்டியில் 150க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் அடுத்து பத்து இடங்களைப் பெற்றவர்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களும் ஓட்டத்தை நிறைவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முதலாவது இடம் பெற்ற மாணவனுக்கு ரூபா 15 000 

இரண்டாம் இடம் பெற்ற மாணவனுக்கு 10 000

மூன்றாம் இடம் பெற்ற மாணவனுக்கு 5000 என்கிற ரீதியில் பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

போட்டியின் முழுமையான காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு லலிதா யுவலரி - கனடா அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.