கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத குழு!
கிழக்கு கல்முனைப் பகுதியில் தோன்றியதாகக் கூறப்படும் தீவிரவாதக் குழு தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, குழு தொடர்பான ஆரம்ப தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், மேலதிக விபரங்களை வெளிக்கொணர அதிகாரிகள் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
குழு அடையாளம் காணப்பட்டதா, தடை செய்யப்பட்டதா அல்லது கைது செய்யப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“தற்போது கிழக்கு மாகாணத்தில் இயங்கும் இவ்வாறானதொரு குழு பற்றிய தகவல் மட்டுமே எமக்கு கிடைத்துள்ளது. உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விஷயத்தை சரிபார்த்து விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது தேசிய பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். பாதுகாப்புப் படையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்பதை நாங்கள் இப்போது உறுதிப்படுத்த முடியும்” என்று அமைச்சர் கூறினார்.
கருத்துகள் இல்லை