உலக தண்ணீர் தினம்!!
"நீரின்றி அமையாது உலகு.." இது அய்யன் வள்ளுவன் வாக்கு..
பஞ்ச பூதங்களில் "நீர்"தான் பிரதான பூதம். மற்ற நான்கின் சம்பந்தங்களும் நீருக்கு உண்டு..
"நிலம்" அதைத் தாங்கும்..
"வான்" அதை வாங்கும்..
"கதிர்" அதை உருக்கும்..
"காற்று" அதை பெருக்கும்.
அதனாலேயே நீராடல் (புனிதமானது) எனும் நெறி உயர் நெறியானது..!
கருவில் நீருக்குள் தான் பிண்டம் வளர்கிறது. நீரில் வளர்ந்த பிண்டம் நீரோடு முடியவே அஸ்தியும் நீரில் கரைக்கப் படுகிறது.
நீரை அனாவசியமாக வீணாக்காமல் இருப்போம். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டியை உறுதி செய்வோம்... நம் சந்ததிக்கு நாம் சேமித்து வைக்கும் மகத்தான சொத்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பார்த்து கொள்வது தான். நம்மால் இயன்ற அளவு மரங்கள் நடுவோம்.
இன்று "#உலக_தண்ணீர்_தினம்."
நீரை வீணாக்காமல் நம் சந்ததிகள் நலம் காப்போம் ..
💧💧💧💧💧💧💧💧💧
தமயந்தி குகன்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை