செட்டிநாட்டு முறைப்படி வெள்ளை குருமா செய்வது எப்படி .!


தேவையான பொருட்கள்:


காய்கறி கலவை (பீன்ஸ், காரட், காலிப்ளவர், பட்டாணி, உருளை) - 1 கப்


பெரிய வெங்காயம் - 1 பெரியது


தக்காளி - 1 சின்னது


அரைக்க:


தேங்காய் - அரை மூடி


பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி


பச்சை மிளகாய் - 1 அல்லது காரத்திற்கேற்ப


சோம்பு - 1/4 தேக்கரண்டி


முந்திரி பருப்பு - 5


பூண்டு - 1 சின்ன பல்


தாளிக்க:


கடுகு - 1/2 தேக்கரண்டி


உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி


கறிவேப்பிலை - சிறிதளவு


மல்லி இழை - சிறிதளவு


செய்முறை:


ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும்.......


அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நல்லா நைசா அரைத்து எடுத்து கொள்ளவும்.....


பின்னர் காய்கறி கலவையை போட்டு நல்லா ஒரு வதக்கு வதக்கி சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்......


நல்லா கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும்.


காய்கறிகள் வெந்த பின் மல்லி இழை தூவி அடுப்பை அணைத்துவிடவும்........

#Tamilarul.net #Tamil #News  #News #TamilNews #tamilshorts #Tamilarulmedia #tamilarul #love #திண்டுக்கல்சமையல் 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.