தையிட்டியிலே அரசியல் செய்வது யார்? அடாத்தான ஆயுதமுனை ஆக்கிரமிப்பென்று தெரிந்தும் அதனை அகற்றாமல் இருப்பது ஏன்?
இன்றைய தினம் யாழில் அனுர தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரைபற்றி பேசிய விதம் வன்மையான கண்டனத்துக்குரியது. அவ்வுரையை மொழிபெயர்த்தவர் அவ்விடத்தில்(மனச்சாட்சி உறுத்த) தொடர்ந்து தடுமாறியதை பார்த்திருப்பீர்கள்.
தையிட்டியிலே அரசியல் செய்வது யார்? அடாத்தான ஆயுதமுனை ஆக்கிரமிப்பென்று தெரிந்தும் அதனை அகற்றாமல் இருப்பது ஏன்? எமது மக்களின் காணியில் அடாத்தாக குந்தியுள்ள பிக்குவை ஏன் இதுவரை கைது செய்யவில்லை. அந்த ஆக்கிரமிப்பாளனுடன் எதற்காக எமது மக்கள் பேசவேண்டும்? அரசென்று கையாலாகாத நீங்கள் எதற்கு? எமது மக்களுக்காக எமது அரசியல் தலைவர்கள் போராடாது, குரல்கொடுக்காது வாய்மூடி ஆக்கிரமிப்புகளுக்கு எடுபிடிகள்போல ஒத்தூத வேண்டுமென எதிர்பார்க்கிறதா சிங்களம்? எமது அறிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்ளாதென அனுரவின் கட்சி பா உ கூறியதை அனுரதான் அறியவில்லை என்றாலும் மொழிபெயர்த்த எடுபிடியுமா அறியவில்லை?
சிங்கள பேரினவாதமே, அதன் எச்சியிலைக்காய் இனத்தைவிற்கும் எடுபிடிகளே! தையிட்டி உட்பட தமிழர்தாயகத்தின் மொத்த ஆளுகையும் எமது மக்களிடம் கிடைக்கும்வரை உங்கள் தேசமும் நின்மதியாக இருக்கவே போவதில்லை என்பது மட்டுமே நிறுத்திட்டமானது. அதுவரை எமது மக்களது போராட்டங்களும் ஓயப்போவதில்லை.
கருத்துகள் இல்லை