இந்திய, பாகிஸ்தானிய அரசியல் முறுகலில் மறுபடியும் அப்பாவிகள் படுகொலையா ??
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது தேனிலவை அங்கு கொண்டாடச் சென்ற, மணமுடித்து நான்கு நாளேயாகிய கடற்படைத் தளபதியொருவரும் கொல்லப்பட்டவருள் ஒருவர். அவரது இளம் மனைவி அவர் உயிரற்ற உடலருகே உட்கார்ந்து அழுகிற காட்சி மனதை உருக்குவது.
2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு நடைபெற்றுள்ள மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும்.
அண்மையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வேறுபாட்டை குறிப்பிட்டு, உலகின் எந்த சக்தியாலும் காஷ்மீரை பாகிஸ்தானிலிருந்து பிரிக்க முடியாது என்று வாக்குமூலத்தின் பின்னர் இந்தத் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தக் காஸ்மீர விவகாரத்தை இழுத்தடித்து, முஸ்லிம்களையும், இந்துக்களையும் மோதவிட்டு, அவர்களைப் பலியாக்கி வேடிக்கை பார்ப்பதாகவே இரண்டு நாடுகளும் உள்ளன. மனிதர்களிடையே மத வன்மமூட்டி மனிதர்களைப் பிரிக்கின்ற இத்தகு காடைத்தனங்கள் நிறுத்தப்படவேண்டும்..
கருத்துகள் இல்லை