அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானத்தை தரையிறக்கிய புலிகள்.!📸
2001 காலப்பகுதி UAV (Unmanned Aerial Vehicle)எனப்படும் ஆளில்லா வேவு விமானம் ஒன்று முல்லைத்தீவில் அமைந்திருந்த புலிகளின் தளத்திற்கு மேலால் பறந்து புலிகளின் நடமாட்டங்களை துல்லியமாக படம்பிடிப்பதில் ஈடுபட்டிருந்தது.
இந்த வேவு விமானம் இயங்குவதற்கு செய்மதி உதவி இன்றியமையாதது. வேவு விமானத்தை இயக்கும் தளத்திலிருந்து செய்மதிக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். வேவு விமானத் தளத்திலிருந்து அனுப்பப்படும் செய்திகளும் கட்டளைகளும் செய்மதி ஊடாக வேவு விமானத்துக்கு தகவல்கள் பறிமாறப்படும். பின்னர் அதி நவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் கதிர் வீச்சு இயக்கத்தில் வேவு விமானம் உடனுக்குடன் செயற்படும்.
இவ்வாறு புலிகளின் இலக்குகளை அதிநவீன புகைப்பட (கறுப்பு, வெள்ளை) காட்சிகளோடு நவீன கதிர்வீச்சுத் தொழிநுட்ப உதவியுடன் கச்சிதமாகப் படமெடுத்து அனுப்ப,அவ்விடத்துக்கு அதிவேக குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதலை நடத்திச்செல்ல தயாராகியது.
UAV இன் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டினை சிறிலங்காவின் கிழக்குப்பிராந்திய கட்டளைப்பீடத்திலிருந்து SMU எனப்படும் அமெரிக்காவின் Special Mission Unit ஐச் சேர்ந்த இரண்டு படையினர் இயக்கிக்கொண்டிருந்தனர்.
திடீரென அவர்களால் தமது UAV இனை தளத்திற்கு திருப்பியெடுக்க முடியாத நிலை UAV யும் மாயமாக மறைந்தது.தகவல் அமெரிக்க SMU தலைமை அலுவலகத்திற்கு பறக்கிறது.
அதுவரை எந்தநாட்டுப் போர்களிலும் அமெரிக்கா இதனை எதிர்கொண்டிருக்கவில்லை.
மர்மம் தொடர்கிறது……
அதன் தொழில்நுட்ப அறிவுத்திறனைப் பயன்படுத்தி எமது போராளிகள் அதன் கட்டுப்பாட்டை இழக்கச்செய்து செம்மலைக் கடலில் விழச்செய்து அதனைக் கைப்பற்றினர்.
இவ்வியக்கவைக்கும் சாதனையை நிகழ்த்தியது வேறுயாருமல்ல,
எமது தேசியத் தலைவரின் மூத்தமகன் சாள்ஸ் அன்ரனி அவர்களே.
இதன்மூலம் சிலகாலம் UAV இன் தொந்தரவுகள் கட்டுப்படுத்தப்பட்டது பின்னர் புதிய தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவின் புதிய UAV சிறிலங்காவுக்கு துணைபுரிந்தது.
வெளிவராத வரலாறாய் எனக்குள் பத்திரப்படுத்தப்பட்டிருந்த இச்சாதனையை எமது மக்களுக்கு பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன்.
சாள்ஸ்_அன்ரனி
சாதனைகள் தொடரும்….
*புலிவேந்தன்*
கருத்துகள் இல்லை